வளர்ப்பு நாயை தாக்கியதற்காக வர்த்தகர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
வளர்ப்பு நாயை தாக்கியதற்காக வர்த்தகர் ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தாக்குதல்..

தனது வளர்ப்பு நாயைத்தாக்கிய கடை ஒன்றின் உரிமையாளரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் அக்போபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், 67 வயதுடைய கடை உரிமையாளரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தரான சாரதியை சந்தேகத்தின் பேரில் ஹபரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தளை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான கடையின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு