அவுஸ்திரேலியன் தமிழ் யூனியன் அமைப்பினால் உயிரிழை அமைப்பிற்கு நோயாளர் காவுவண்டி அன்பளிப்பு...

ஆசிரியர் - Editor I
அவுஸ்திரேலியன் தமிழ் யூனியன் அமைப்பினால் உயிரிழை அமைப்பிற்கு நோயாளர் காவுவண்டி அன்பளிப்பு...

அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் அமைப்பினால் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்புக்கு அம்புலன்ஸ் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக செயலாளர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

காணி மேலதிக செயலாளர் சி.குணபாலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் வீ.சண்முகராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், மாவட்ட உதவி செயலாளர் லி.கேகிதா, பிரிகேடியர் கே.எல்.ஜ. கருணாநாயக,  கல்லூரி அதிபர் ச.பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அவுஸ்ரேலியன் தமிழ் யூனியன் அமைப்பைச் சேர்ந்தவர்களும், உயிரிழை அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு