12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 வயதான சிறுவன் கைது!

ஆசிரியர் - Editor I
12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 14 வயதான சிறுவன் கைது!

12 வயதான பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி ஏற்கனவே அவரது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாகவும் அந்த சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே அந்த மாணவி மீண்டும் 14 வயது மாணவனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு