யாழ்.ஆனைக்கோட்டையில் பட்டா வாகனத்தை வழிமறித்து தாக்குதல்! 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டையில் பட்டா வாகனத்தை வழிமறித்து தாக்குதல்! 3 பேர் கைது..

வீதியால் பயணித்த பட்டா வாகனத்தை வழிமறித்து சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (18) இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்து, வாகன சாரதியை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மானிப்பாய், கல்வியங்காடு மற்றும் மணியந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை கடந்த செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு