ஆட்டோ சாரதியின் தலையில் சுத்தியலால் அடுத்துவிட்டு தங்க சங்கிலி திருட்டு! சந்தேகநபரை மடக்கிய மக்கள்...

ஆசிரியர் - Editor I
ஆட்டோ சாரதியின் தலையில் சுத்தியலால் அடுத்துவிட்டு தங்க சங்கிலி திருட்டு! சந்தேகநபரை மடக்கிய மக்கள்...

முச்சக்கர வண்டியின் சாரதியின் தலையில் சுத்தியலால் அடித்துவிட்டு கழுத்திலிருந்த  தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்ற  இளைஞர் ஒருவரை அலவத்துகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக பிரதேசவாசிகளுக்கு அறிவித்ததையடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.

இதன்போது சந்தேகநபர் ஆட்டோ சாரதியிடமிருந்து கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியை வயலில் வீசி எறிந்த நிலையில் அதனைப் பொலிஸார் மீட்டனர்.

இந்த தங்கச் சங்கிலியின் பெறுமதி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என அலவத்துகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு