மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு - கொக்குவில் பிரதேசத்தில் 17 வயதுடைய மகளிடம் பாலியல் சேட்டை புரிந்த தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     

குறித்த சிறுமியான மகள் மீது தந்தையாரான கணவன் பாலியல் சேட்டை புரிந்துள்ளதாக தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் சம்பவதினமான நேற்று குறித்த நபரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 58 வயதுடைய நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நேற்று உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைணை கொக்குவில் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு