மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய வாகனம் தப்பி ஓட்டம்! இளைஞன் பலி, மற்றொரு இளைஞன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய வாகனம் தப்பி ஓட்டம்! இளைஞன் பலி, மற்றொரு இளைஞன் படுகாயம்..

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனம் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தினை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு