சிறை வைத்தியசாலையில் சச்சித்ர சேனாநாயக்க

ஆசிரியர் - Editor II
சிறை வைத்தியசாலையில் சச்சித்ர சேனாநாயக்க

ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக சச்சித்ர சேனாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி விளையாட்டு ஊழல் விசாரணைப் பிரிவில் சரணடைந்த சச்சித்ர சேனாநாயக்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு