நடிகர் மாரிமுத்து காலமானார்

ஆசிரியர் - Editor II
நடிகர் மாரிமுத்து காலமானார்

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகரான மாரிமுத்து இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின் இவர் 2008 ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014 ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார். 

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அண்மையில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. இந்நிலையில், நடிகர் மாரிமுத்து இன்று வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு