நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்...

ஆசிரியர் - Editor I
நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்...

கணவன் - மனைவி இடையில் ஏற்பட்ட தகராறினால் மனைவி அடித்துக் கொல்லைப்பட்ட சம்பவம் கம்பளை - வெலம்பொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உடுநுவர வெலம்பொட லொகுஅங்க பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அமலி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவி நீண்ட நேரமாக கையடக்கத் தொலைபேசியில் பேசியதை அறிந்த கணவன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சமையல் அறையில் இருந்த தடி ஒன்றினால் மனைவியை தாக்கியுள்ளார். 

இதன்போது பலத்த காயமடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு