ரயில் பாதையை கடக்க முயன்ற வான் மீது மோதிய ரயில்! இருவர் காயம், ரயிலுக்கும் வானுக்கும் இடையில் சிக்கிய பெண்ணை 1 மணிநேரம் போராடி மீட்ட தீயணைப்புபடை..

ஆசிரியர் - Editor I
ரயில் பாதையை கடக்க முயன்ற வான் மீது மோதிய ரயில்! இருவர் காயம், ரயிலுக்கும் வானுக்கும் இடையில் சிக்கிய பெண்ணை 1 மணிநேரம் போராடி மீட்ட தீயணைப்புபடை..

வாதுவை - தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் வேன் ஒன்று ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று புதன்கிழமை (30) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை வடக்கிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த   ரயிலில் குறித்த வேன் மோதி ரயிலின் இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

வேனில் இருவர் பயணித்த நிலையில் சாரதியை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளதோடு, 

வேனுக்கும் ரயிலுக்கும் இடையே பெண் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்புப் பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து குறித்த பெண் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளானவர்கள் கொட்டிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ரயிலின் இயந்திரம் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை வடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


    வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

    மேலும் சங்கதிக்கு