வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதி தடம்புரண்ட உழவு இயந்திரம்! ஒருவர் பலி, இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதி தடம்புரண்ட உழவு இயந்திரம்! ஒருவர் பலி, இருவர் படுகாயம்..

வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உழவு இயந்திரத்தினை திருத்தப்பணிக்காக கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள திருத்தகத்திற்கு சென்று மீண்டும் கொக்குளாய் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த போது கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் கொழும்பை சேர்ந்த 24 வயதுடைய  இளைஞனே இவ்வாறு மரணமானவராவார். 42 மற்றும் 27 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு