விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொதுமக்கள், இரு பெண்கள் கைது..

ஆசிரியர் - Editor I
விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொதுமக்கள், இரு பெண்கள் கைது..

திருகோணமலை - கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நீண்டகாலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார விடுதி நேற்று திங்கட்கிழமை (31) இரவு அப்பிரதேச மக்களால் சுற்றிவைக்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இருபெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு பெண்களும் 25 மற்றும் 30 வயதினர் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பெண்களையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு