நீர்கொழும்பில் நீராட சென்றிருந்த யாழ்ப்பாண இளைஞன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்! இருவரின் சடலங்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
நீர்கொழும்பில் நீராட சென்றிருந்த யாழ்ப்பாண இளைஞன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்! இருவரின் சடலங்கள் மீட்பு..

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் உட்பட மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டன.

டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் இன்று அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

கொஸ்லந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் இன்று முற்பகல் 9.40   மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் பணி தொடர்கிறது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு