யாழ்.மீசாலையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி..

யாழ்.மீசாலை - புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகைரதத்துடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.

மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பத்தில் மீசாலை கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு