யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசம்! இன்று அதிகாலை பயங்கரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து தீ விபத்தில் முற்றாக எரிந்து நாசம்! இன்று அதிகாலை பயங்கரம்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து இன்று அதிகாலை தீ விபத்தில் சிக்கி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

புத்தளம் - மதுரங்குளி செம்பட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றபோது 43 பயணிகள் பேருந்தில் இருந்துள்ளனர். எனினும் பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. 

மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து புத்தளம் நகர சபை தீயணைக்கும் பிரிவினரும், இலங்கை விமானப் படையின் பாலாவி முகாமைச் சேர்ந்த விமானப் படையினரும், பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குறித்த பஸ் முழுமையாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு