மொத்த குடும்பமும் கொலை!! -வெட்டிய தலை அருகே எச்சரிக்கை கடிதம் வைத்துச் சென்ற மர்ம குழு-

ஆசிரியர் - Editor II
மொத்த குடும்பமும் கொலை!! -வெட்டிய தலை அருகே எச்சரிக்கை கடிதம் வைத்துச் சென்ற மர்ம குழு-

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்று, குடும்பம் ஒன்றை மொத்தமாக கொலை செய்து, அவர்களின் வெட்டப்பட்ட தலைகளுக்கு அருகே எச்சரிக்கை கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டுச் சென்றுள்ளது.

அந்நாட்டின்  சில்பான்சிங்கோ நகரில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுமார் 6 நாட்களாக காணாமல் போயுள்ளனர். திடீரென்று காணொளி ஒன்றில் தோன்றிய அவர்கள், தங்களின் கொடூர குற்றங்கள் தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர். குறித்த காணொளியானது யூன் மாதம் 15 ஆம் திகதி சமூக ஊடகங்களில் வெளியானது.

அந்த காணொளியில், 4 பேர் கொண்ட அந்த குடும்பத்தினருடன், மேலும் 3 பேர் கைகள் கட்டப்பட்ட நிலையில், முகம் மூடப்பட்டு காணப்பட்டனர். ஆனால் சனிக்கிழமை பகல் அந்த 7 பேர்களின் தலையும் வெட்டப்பட்ட நிலையில், கார் ஒன்றின் மீது காணப்பட்டது.

அவர்களின் சடலங்கள், அப்பகுதி வீதிகளின் பல பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், வெட்டப்பட்ட அந்த தலைகளுடன் நான்கு எச்சரிக்கை கடிதத்தையும் மீட்டுள்ளனர்.

அதில் ஒரு கடிதம் நகர மேயருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும், ஒரு கடிதம் உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும், மூன்றாவது கடிதம் நகர மேயரை தெரு நாய் என குறிப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு