ரஷ்ய ஜனாதிபதி புடின் தீடிரேம மாயம்!! -24 மணி நேரமாக வெளியே தலைகாட்டவில்லை என தகவல்-

ஆசிரியர் - Editor II
ரஷ்ய ஜனாதிபதி புடின் தீடிரேம மாயம்!! -24 மணி நேரமாக வெளியே தலைகாட்டவில்லை என தகவல்-

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய நிலையில் கடந்த 24 மணி நேரமாக புடினும் வெளியில் தலைகாட்டவில்லை என கூறப்படுகிறது. 

தலைமறைவான அவர் தனது ரகசிய, குண்டு துளைக்காத அறைக்குள் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

வாக்னர் தலைவர் பிரிகோஜின் (Prigozhin) துரோகம் செய்துவிட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று தொலைக்காட்சியில் தோன்றி புடின் பேசும் காட்சிகள் வெளியாகின என்றாலும், அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பேட்டி என கூறப்படுகிறது.

இத்தனை ஆண்டுகால புடினுடைய ஆட்சியில் இவ்வளவு பெரிய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் வாக்னர் தலைவர் பிரிகோஜின் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்விரு விடயங்களும் அன்னாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு