மாஸ்கோ நோக்கி விரைந்த வாக்னர் படை!! -தனி விமானத்தில் வெளியேறிய புடின்-

ஆசிரியர் - Editor II
மாஸ்கோ நோக்கி விரைந்த வாக்னர் படை!! -தனி விமானத்தில் வெளியேறிய புடின்-

உக்ரைன்- ரஷ்யா போரில் ரஷ்யா அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டது வாக்னர் படை, உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைந்த வாக்னர் படை, அந்நாட்டின் முக்கிய நகரை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது.

தொடர்ந்து மாஸ்கோவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததாகவும், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் எனவும் வாக்னர் படைத்தலைவர் அறிவித்தார்.

வாக்னர் படையின் முன்னேற்றம், உள்நாட்டு போருக்கு வழிவகுக்கலாம் என பதற்றம் நீடித்துக் கொண்டிருந்த நிலையில், பொலாரஸ் ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வாக்னர் படை பின்வாங்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி விரைந்த போது, புடின் தனி விமானத்தில் சென்று விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

புடினுக்கான  சிறப்பு விமானம் மூலம் மாஸ்கோவில் இருந்து, ரஷ்ய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு