அமெரிக்கா இளம் வீரருக்கு பந்துவீச தடை விதித்தது ஐ.சி.சி

ஆசிரியர் - Editor II
அமெரிக்கா இளம் வீரருக்கு பந்துவீச தடை விதித்தது ஐ.சி.சி

ஐக்கிய அமெரிக்கா அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான கைல் பிலிப்பிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் பந்துவீச்சும் விதம் முறையற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு போட்டித் தடை விதிப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இவ் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் அவரால் பந்துவீச முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 வயதான கைல் பிலிப் இதுவரை அமெரிக்கா அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 இலக்குகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு