இரு குழுக்களுக்கிடையில் நடந்த மோதல்! 25 வயதான இளம் குடும்பஸ்த்தர் கொலை..

ஆசிரியர் - Editor I
இரு குழுக்களுக்கிடையில் நடந்த மோதல்! 25 வயதான இளம் குடும்பஸ்த்தர் கொலை..

இரு குழுக்களுக்கிடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இளம் குடும்பஸ்த்தர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நானாட்டான் - அச்சங்குளம் கிராமத்தில் நேற்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய நிலையில், ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய குழுவிலிருந்து குறித்த நபர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர், நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசித்து வந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு