வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்து எரிந்த பட்டா வாகனம்!

ஆசிரியர் - Editor I
வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்து எரிந்த பட்டா வாகனம்!

மன்னார் - இசை மாலைத்தாழ்வு பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் நேற்று 14ம் திகதி திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி இசைமாலைத்தாழ்வு பகுதியில் வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ரக வாகனத்தின் இயந்திர பகுதி திடிரென தீப்பற்றிய நிலையில் வாகன சாரதி மற்றும் உதவியாளர் வாகனத்தில் இருந்து வெளியேறி வாகனத்தில் இருந்த பொருட்களையும் அகற்றி உள்ளனர்.

வெளியேறிய சற்று நேரத்தில் வாகனம் முழுவதும் தீ பரவல் ஏற்பட்டு முழுமையாக வாகனம் எரிந்து நாசமாகியது. சாரதியும் உதவியாளரும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு