வீடொன்றுக்குள் நுழைந்து பெண் ஒருவரை தாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மனைவியும் கைது..

வீடொன்றுக்குள் நுழைந்து பெண் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதுடன், சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வஸ்கடுவ பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இரவு சந்தேக நபர்களான சார்ஜன்டும் அவரது மனைவியும் குறித்த யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.