SuperTopAds

300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்!

ஆசிரியர் - Editor I
300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்!

உணவுப் பொருட்கள் மற்றும் மின் சாதனங்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

HS 286 பிரிவின் கீழ் உள்ள பொருட்களுக்கு இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

2023 ஜூன் 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

https://dlg.lk/genie