தேனிலவுக்காக இந்தோனேஷியா சென்ற தமிழ் புதுமண தம்பதி!! -நீரில் மூழ்கி பிரதாப மரணம்-

ஆசிரியர் - Editor II
தேனிலவுக்காக இந்தோனேஷியா சென்ற தமிழ் புதுமண தம்பதி!! -நீரில் மூழ்கி பிரதாப மரணம்-

இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு தேனிலவுக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த இளம் தம்பதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் தமிழ்நாடு சேலம் மாவட்டத்தை சேர்ந்த வைத்தியர் லோகேஷ்வரன் மற்றும் பூவிருந்த வல்லி பகுதியை சேர்ந்த விபூஷ்னிக்கும் இடையே கடந்த முதால் திகதி சென்னை பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காக இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு புதுமண தம்பதி சென்றுள்ளனர்.

அங்கு விரைவு மோட்டார் படகில் புதுமண தம்பதி சென்று கொண்டு இருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நீண்ட காலமாக காதலித்து பின் பெற்றோரின் சம்மதத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்ற திருமணம், ஒரே வாரத்தில் சோகத்தில் முடிந்து இருப்பது ஒட்டுமொத்த உறவினர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு