யாழ்.மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் இரு பொலிஸாரிடம் வாக்குமூலம் பதிவு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் இரு பொலிஸாரிடம் வாக்குமூலம் பதிவு!

யாழ்.மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  இன்றையதினம் நான்கு மணி நேரமாக வாக்குமூலம் வழங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருப்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு