அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழல்கள் அம்பலமாக தொடங்கியுள்ளது! ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடுகள்

ஆசிரியர் - Editor III
அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழல்கள் அம்பலமாக தொடங்கியுள்ளது! ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடுகள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஊழல்கள் அம்பலமாக தொடங்கியுள்ளது! ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடுகள்!

அரச வாகனங்களை தங்களின் சுயதேவைகளுக்காக பாவனை செய்யும் இரண்டு அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 

அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் அரச வாகனங்களை தங்களின் சுயதேவைகளுக்காகவும் உல்லாச நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கவனித்து வந்த சுயாதீன ஊழல் எதிர்ப்புஅமைப்பு பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பில் ஆதாரங்களை திரட்டிய பின்னர் அரச தரப்புகளுக்கு முறைப்பாடுகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அரச உயர்மட்டங்கள் விரைவில் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் குறித்த அதிகாரிகளின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதாகவும் எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்கள்.

செயலாளர் மற்றும் உதவி செயலாளர் ஆகியோர் பாலியல் சேட்டைகள், மதுபாவனை, உல்லாச பயணங்கள் ஆகியவற்றையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைப்பிற்கு குற்றச்சாட்டுக்ள் குவிந்த வண்ணம் உள்ளன, செயலாளர் ஏற்கனவே திறந்த மேனியுடன் பாலியல் சேட்டைகளை செய்து அதன் புகைப்படங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. உதவி செயலாளர் செயலாளருடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களும் குறித்த அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு