யாழ்.நெடுந்தீவு கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!!

யாழ்.நெடுந்தீவில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். 

இந்த வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 101 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு