வற்றாப்பளை கோவிலிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
வற்றாப்பளை கோவிலிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழப்பு!

முல்லைதீவு - வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி  உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி  அம்மன்  ஆலயத்திற்கு சென்று விட்டு  வடமராட்சி கிழக்கு  குடத்தனை பகுதியில் உள்ள  தனது வீடு நோக்கி  பயணித்த இளைஞரே  மின் கம்பத்துடன் மோதி  உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம்  இன்று அதிகாலை  3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   

குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக   பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு