கணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட இளம் குடும்ப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
கணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட இளம் குடும்ப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

கிளிநொச்சி கோணிவில் பகுதியில் கணவனால் தாக்கப்பட்டு படுகாமடைந்த இளம் குடும்ப பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

கோணாவில் மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் குடும்ப பெண் அவரது கணவரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு 

இரண்டு கண்கள் மற்றும் தலைப்பகுதியில் பல காயங்களுக்கு உள்ளாகிய நிலையில்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

குறித்த பெண் தாக்கப்பட்டு படுகாயமடைந்த  நிலையில் அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது. இதனையடுத்தே  இது பற்றி பலரும் ஆராய முயன்றுள்ளனர். 

வன்முறைகளை ஏற்படுத்துவர்களை தண்டிப்பதற்கு அரச  உயர் அதிகாரிகள் முதல் பொலிஸாரோ  முன் வருவதில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் பாதுகாக்கப்படுவதாகவே பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இவ்வாறு குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு