அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாம் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை!! மனிதாபிமான அணுகுமுறையே எம்மிடம் உள்ளது...

ஆசிரியர் - Editor I
அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாம் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை!! மனிதாபிமான அணுகுமுறையே எம்மிடம் உள்ளது...

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை துப்பாக்கிமுனையில் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. மனிதாபிமான முறையிலேயே அணுகிக் கொண்டிருக்கின்றோம்.

என கூறியிருக்கும் வடமாகாண கட்டளை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் இராஜதந்திர ரீதியில் இந்தப் பிரச்சினை அணுகப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  இன்று மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது, இதன்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோதே கடற்படை அதிகாரி மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், ஒரு சிலபடகுகளில் இந்திய மீனவர்கள் வந்தால் அதனை கட்டுப்படுத்தலாம் ஆனால் அதிகளவில் வருவதனால் எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. 

அதாவது அந்த கட்டுப்படுத்துவதற்குரிய பூரணமான வளங்கள் எங்களிடம் இல்லை குறிப்பாக ஆளணி உபகரணங்கள் எங்களிடம் இல்லை. எனவே அதனை ஒரு ராஜதந்திர முறையில் கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது.

நமது கடற்பிரதேசமானமானது பெரிய பிரதேசம் அந்த பிரதேசம் முழுவதிலும் கடற்படை செயற்படுகின்றது எனினும் எம்மால் முயன்றவரை நாங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துகின்றோம். 

குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் 12ஆயிரம் கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளோம். அதேபோல் போதைப் பொருள் விநியோகம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம்.

இந்திய மீனவர்களை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த நாங்கள் இன்று வரை முயற்சிக்கவில்லை. மனிதாபிமானமாக செயற்படுகின்றோம். அதாவது மீன்பிடி தொழிலாளர்களாகவே பார்க்கின்றோம். 

எனவே கடற்படை தேசிய பாதுகாப்பினை செயல்படுத்தவில்லை என நீங்கள் கருத வேண்டாம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு