பட்டா - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளம் குடும்பஸ்த்தர் பலி...

ஆசிரியர் - Editor I
பட்டா - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளம் குடும்பஸ்த்தர் பலி...

கிளிநொச்சியில் நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து தர்மபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தியாகராசா சஞ்சீவன் (வயது 36) தருமபுரம் பகுதியைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு