முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள்! தெல்லிப்பழை மகாஜனா கல்லுாரி ஆசிரியர்கள் 7 பேர் மீது பெற்றோர் முறைப்பாடு...

ஆசிரியர் - Editor I
முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள்! தெல்லிப்பழை மகாஜனா கல்லுாரி ஆசிரியர்கள் 7 பேர் மீது பெற்றோர் முறைப்பாடு...

யாழ்.வலிகாமம் மகாஜனா கல்லுாரியில் ஆசிரியர் ஒருவரினால் 3 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் சிலர் அழுத்தம் கொடுப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் கேள்வி கேட்கும் மாணவர்கள் மூவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் இரு மானவர்கள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஒரு மாணவனின் மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் 7பேர் ஆசிரியர் மீதான முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு 

பெற்றோருக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதுடன் பணம் வழங்குவதாகவும் பெற்றோருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. குறித்த விடையம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தி அலுவலகமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றிற்கு 

முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு