கைகள் கட்டப்பட்ட நிலையில் 84 வயதான முதியவர் சடலமாக மீட்பு!!

ஆசிரியர் - Editor I
கைகள் கட்டப்பட்ட நிலையில் 84 வயதான முதியவர் சடலமாக மீட்பு!!

கைகள் கட்டப்பட்ட நிலையில் 84 வயதான முதியவர் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானை - வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து வந்த 84 வயதுடைய ஜா - எல பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் முகம் மற்றும் கழுத்துப் பகுதி துணியொன்றால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவைத்துள்ளனர்.

குறித்த நபரின் புதல்வி வழங்கிய தகவலுக்கு அமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடலில் அடிகாயங்கள் காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு