யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்!

யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (24) இடம்பெற்ற பயிற்சி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே இடம்பெற்ற மோதல் அசம்பாவிதம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திற்கும் - யாழ்.வலயக் கல்வி பணிப்பாளர் இராதாகிருஸ்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் அலுவலகத்தில் நேற்று 2023.05.25 இடம்பெற்றது.

இச் சந்திப்பில் ஆசிரியர் மற்றும் பாடசாலை இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும், வலயக்கல்வி அலுவலகத்தினால் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திற்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும், 

பொலிஸார் மற்றும் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் இணைந்து உரிய சட்ட விசாரணைகளை முன்னெடுத்து முறையான தீர்மானம் ஒன்றை நீதிமன்றிற்கு ஊடாக முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் மோதலுடன் தொடர்புடைய பயிற்சி ஆசிரியர் அவர் தரப்பிலும், பாடசாலை சார்பில் அதிபர் தரப்பிலும் பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதே நேரம் ஆசிரியர்களிலும் ஒரு சிலர் தமது சொந்த விருப்பத்தில் இடமாற்றத்தை கோரி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது. 

இது குறித்து தான் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் ஆசிரியர்கள் தொடர்பான ஒரு சில விவகாரங்கள் தொடர்பிலும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு பணிப்பாளர் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்பாளர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு