யாழ்.நகரிலுள்ள பழக்கடை ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்! இருவர் படுகாயம்...
![யாழ்.நகரிலுள்ள பழக்கடை ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்! இருவர் படுகாயம்...](https://jaffnazone.com/storage/images/2023/05/IMG-20230525-WA0129_1080.jpg)
யாழ்.நகரிலுள்ள பழக்கடை ஒன்றுக்குள் புகந்து வாள்வெட்டு குழு காடையர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை வீதியில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று இரவு(25) இனந்தெரியாத குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.