இராணுவ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! இராணுவ சிப்பாய் சிக்கினார்..

இராணுவ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய் முல்லேரியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருட்களுடன் 1,850 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, முல்லேரியா வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.