தங்கம் மற்றும் தொலைபேசிகளை விமான நிலையம் ஊடாக கடத்திவந்த நாடாளுமன்ற உறுப்பினர்...

சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருத்து தங்கம் மற்றும் தொலைபேசிகளை கடத்திவந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் 3 கிலோ 397 கிராம் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
இதன் சந்தை பெறுமதி சுமார் 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினரின் பயணப் பொதியில் இருந்த கைப்பேசிகளை சுங்க பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதில், 91 ஸ்மார்ட் கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் சந்தை பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.