15 வயது சிறுமியை காணவில்லை, பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெற்றோர்..!

ஆசிரியர் - Editor I
15 வயது சிறுமியை காணவில்லை, பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெற்றோர்..!

மன்னார் - முசலி பண்டாரவெளி மணற்குளம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை 18ம் திகதி தொடக்கம் காணவில்லை என கூறி பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர். 

குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.மாணவி காணாமல் போனது தொடர்பாக தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து 

சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் நேற்று (19) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு