தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் முருகன் சிலையை உடமையில் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் முருகன் சிலையை உடமையில் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது!

தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் முருகன் சிலை ஒன்றை வைத்திருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் மன்னார் பாலத்தடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) பாலத்தடி சோதனை சாவடியில் சோதனை நடவடிக்கையின்போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் 

சிறிய அளவிலான முருகன் சிலை ஒன்றை தம் உடமையில் வைத்திருந்த தன் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு