பனை மரம் வெட்டியவரை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் பறித்த இரு பொலிஸாருக்கு நடந்த தரமான சம்பவம்...

ஆசிரியர் - Editor I
பனை மரம் வெட்டியவரை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் பறித்த இரு பொலிஸாருக்கு நடந்த தரமான சம்பவம்...

பனை மரம் வெட்டிக் கொண்டிருந்தவரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு பொலிஸார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் மூதுார் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த 21ஆம் திகதி இந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் சிவில் உடையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, ​​நபர் ஒருவர் பனை மரத்தை வெட்டிக் கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட பொலிஸார் அவரை கைது செய்யப்போவதாக கூறியுள்ளனர். 

பின்னர் அவரை விடுவிக்க முப்பதாயிரம் ரூபா பணம் தேவையென தெரிவித்துள்ளனர். எனினும்  அந்த தொகையை பனைமரம் வெட்டியவர் வழங்க தவறியுள்ளார்.

பின்னர் குறித்த நபரிடம் இருந்து  15,000 ரூபாயை பலவந்தமாக மிரட்டி வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு