யாழ்.மல்லாகத்தில் வீடு உடைத்துக் கொள்ளை! 23 வயதான நபர் நகைகளுடன் சிக்கினார்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மல்லாகத்தில் வீடு உடைத்துக் கொள்ளை! 23 வயதான நபர் நகைகளுடன் சிக்கினார்...

யாழ்.மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் 19 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.  

கடந்த செவ்வாய்க்கிழமை பட்டபகலில் மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்தபோது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு