யாழ்.மாநகரில் இடம்பெற்ற பாரிய மோசடி வியாபாரம் அம்பலம்! சிக்கினார் மோசடி வியாபாரி...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் இடம்பெற்ற பாரிய மோசடி வியாபாரம் அம்பலம்! சிக்கினார் மோசடி வியாபாரி...

யாழ்.மாநகரில் இடம்பெற்ற பாரிய மோசடி வியாபாரம் அம்பலமாகியுள்ளதுடன், மோசடி வியாபாரி மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நேற்றையதினம் யாழ்.நகர பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதியான சோடா போத்தல்களை காலாவதி திகதியில் மாற்றம் செய்தும், காலாவதி திகதியை அழித்தும்

ஒரு விநியோகஸ்த்தர் விற்பனைக்காக வழங்குவதாக யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது. 

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் நகர கடைகளில் எழுமாறாக பரிசோதனை மேற்கொண்டனர். 

இதன்போது காலாவதியான சோடாப்போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்தும் மற்றும் காலாவதி திகதியை அழித்தும் விற்னைக்கு வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதனைதொடர்ந்து விநியோகஸ்தரின் பிறவுன் வீதியில் உள்ள களஞ்சியசாலை யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது காலாவதி திகதி அழிக்கப்பட்ட நிலையில் 1110 சோடாப்போத்தல்களும் 600  காலாவதியான சோடாப்போத்தல்களும் என மொத்தம் 1710 சோடாப்போத்தல்கள், 

கடைகளிற்கு விநியோகம் செய்வதற்கு தயார் நிலையில் இருந்தபோது கைப்பற்றப்பட்டது. குறித்த விநியோகஸ்தரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு 

பொது சுகாதார பரிசோதகர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு