கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த போது வெடித்து சிதறிய கைபேசி!! -8 வயது சிறுமி பிரதாப மரணம்-

ஆசிரியர் - Editor II
கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த போது வெடித்து சிதறிய கைபேசி!! -8 வயது சிறுமி பிரதாப மரணம்-

இந்தியாவின் கேரளாவில் முகத்தில் கைபேசி வெடித்ததால் 3 ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேரளா, திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த கைபேசியில் கார்ட்டூன் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென கைபேசி வெடித்து சிதறயிது.

முகத்தில் கைபேசி வெடித்து சிதறியதால் 8 வயது ஆதித்யஸ்ரீ படுகாயம் அடைந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் படுகாயம் அடைந்த ஆதித்யஸ்ரீயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

மருத்துவ சிகிச்சை கொடுத்தபோதிலும், சிகிச்சை பலனில்லாமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழையனூர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு