யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி திருட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி திருட்டு!

யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு துாபியில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் அதற்கான இணைப்பு வயர் ஆகியன திருடப்பட்டுள்ளது. 

இது குறித்து தந்தை செல்வா சதுக்கத்தின் முன்னால் உள்ள யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக மோட்டர் திருட்டும் இடம்பெறுவதாக பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

கிட்டத்தட்ட மூன்று தடவைக்கு ரூபா 75 பெறிமதியான மோட்டர் திருடப்பட்டுள்ளதாகவும் திருட்டு தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ள போதிலும்

பொலிஸ் நிலையத்திற்கு முன்பு உள்ள வளாகத்தில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு