இந்தியாவிலிருந்து வடமாகாணத்திற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது!

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து வடமாகாணத்திற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது!

இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 லட்சத்து 11 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் மன்னார் - சிலவத்தை பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வந்து குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் பொருட்கள் யாவும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளின் பின்னர் கடத்தல் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு