இரு குடும்பத்தினரிடையே கடும் மோதல்!! ஒருவர் கொலை, 5 பேர் படுகாயம், பலர் தலைமறைவு...

ஆசிரியர் - Editor I
இரு குடும்பத்தினரிடையே கடும் மோதல்!! ஒருவர் கொலை, 5 பேர் படுகாயம், பலர் தலைமறைவு...

மன்னார் - சாந்திபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,நீண்டகாலமாக சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்திற்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதனப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு குறித்த இரு குடும்பத்திற்கு இடையில் மீண்டும் பிரச்சினை இடம் பெற்ற நிலையில் முரண்பாடு முற்றியுள்ளது.இந்நிலையில் பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நிலையில் எ

மில் நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் மரணமடைந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட ஐவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு