மகளின் பூப்பனித நீராட்டு விழாவுக்காக ஜேர்மனியிலிருந்து வந்த குடும்ப பெண் விபத்தில் பலி!

ஆசிரியர் - Editor I
மகளின் பூப்பனித நீராட்டு விழாவுக்காக ஜேர்மனியிலிருந்து வந்த குடும்ப பெண் விபத்தில் பலி!

மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் நாட்டிலிருந்து நாடு திரும்பிய குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்துச் சம்பவம் முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணும் அவருடைய தாயாரும் சிலாவத்தையிலிருந்து கொக்கிளாய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது

அளம்பில் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பின்னர் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையல் ஜேர்மன் நாட்டிலிருந்து வந்த சிறீதர் ஜெனிற்றா என்ற 42 வயதான பெண் உயிரிழந்துள்ளார். 

இவர் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு மஞ்சல் நீராட்டுவிழா செய்வதற்காக சொந்த இடமான சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் 

இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு