கர்ப்பிணி காதலியை 40 முறை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற காதலன்!! -லண்டனில் பயங்கர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
கர்ப்பிணி காதலியை 40 முறை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற காதலன்!! -லண்டனில் பயங்கர சம்பவம்-

கிழக்கு லண்டனில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி காதலியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாக்னியில் வசித்து வரும் லியாம் டெய்லர் (வயது 37). இவருடன் கர்ப்பிணியான காதலி ஐலிஷ் வால்ஷ் (வயது 28) உடன் இருந்து வந்துள்ளார்.

டெய்லர் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தி வந்ததால் அவருடனான உறவை முடித்துக்  கொள்ள ஐலிஷ் முயன்றுள்ளார். 

12 வார கர்ப்பமாக இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது லியாம் டெய்லர் அவரை கத்தரிக்கோலால் 40 முறை குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று டெய்லரை கைது செய்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு