பழி வாங்குமா இலங்கை அணி!! -நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்-

ஆசிரியர் - Editor II
பழி வாங்குமா இலங்கை அணி!! -நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்-

நியூசிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஒருநாள் மற்றும் 3 ரி-20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து அணி டாம் லாதம் தலைமையிலும், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலும் களம் காணுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 99 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 49 இல் நியூசிலாந்தும், 41 இல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. 8 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு